நீண்ட குணப்படுத்தல் பிரார்த்தனை
அவரே குணப்படுத்துபவர், போதுமானவர், உதவுபவர், சகலத்தையும் மன்னிப்பவர், கருணை மயமானவர்.
மேன்மையானவரே, நம்பிக்கைக்குரியவரே, மகிமை பொருந்தியவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
மன்னரே, உயர்வடையச் செய்பவரே, தீர்ப்பளிப்பவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
ஒப்பற்றவரே, நித்தியமானவரே, ஏகநாயகரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
அதி புகழப்படுபவரே, புனிதமானவரே, உதவுபவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
சர்வஞானியே, அதி விவேகமானவரே, அதி மகத்தானவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப் பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
கருணை வள்ளலே, மாட்சிமை பொருந்தியவரே, அருள்பாலிப்பவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
அன்பரே, சீராட்டப்படுபவரே, பேரானந்த-மானவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
அதி வல்லவரே, பராமரிப்பவரே, ஆற்றல் மிக்கவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
ஆள்பவரே, சுயஜீவியானவரே, எல்லாம் அறிந்தவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
ஆவியானவரே, ஒளிமயமானவரே, அதி வெளிப்படை யானவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
அனைவராலும் விஜயம் செய்யப்படுபவரே, யாவருக்கும் தெரிந்தவரே, எல்லாருக்கும் மறைவாய் உள்ளவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
மறைக்கப்பட்டுள்ளவரே, வெற்றியாளரே, அருள்பவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
எல்லாம் வல்லவரே, உதவியளிப்பவரே, மறைப்பவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
அமைப்பவரே, நிறைவளிப்பவரே, வேரறுப்பவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
உதிப்பவரே,ஒன்றுசேர்ப்பவரே,மேன்மைப்படுத்துபவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
பூரணமாக்குபவரே, தளைகளற்றவரே, வள்ளன்மை மிக்கவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப் பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
தயாளரே, மறுப்பவரே, படைப்பவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
அதி விழுமியவரே, அழகரே, வள்ளன்மை மிக்கவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
நியாயசீலரே, கிருபையாளரே, தாராளமானவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
நிர்ப்பந்திக்கவல்லவரே, என்றும் நிலையானவரே, சர்வமும் அறிந்தவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
அற்புதமானவரே, நாள்களில் புராதனமானவரே, பெருமிதமானவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
பாதுகாப்பு மிக்கவரே, ஆனந்தத்தின் அதிபதியே, விரும்பப்படுபவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
அனைவரிடத்திலும் கருணை கொள்பவரே, எல்லாரிடத்திலும் இரக்கம் காட்டுபவரே, உதாரகுணம் படைத்தவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
அனைவருக்கும் சுவர்க்கமே, யாவருக்கும் அடைக்கலமே , யாவற்றையும் இரட்சிப்பவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
எல்லாரையும் பரிபாலிப்பவரே, யாவராலும் வேண்டப்படுபவரே, உயிர்ப்பிப்பவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
திறப்பவரே, அழிப்பவரே, அதி கிருபையாளரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
எனதான்மாவே, எனதன்பரே, எந்தன் நம்பிக்கையே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
தாகந் தணிப்பவரே, அதிவுயர் பிரபுவே, அதி மதிப்பார்ந்தவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
மாபெரும் நினைவே, அதி உன்னத நாமமே, அதி புராதன வழியே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
அதி புகழ்ச்சிக்குரியவரே, அதி புனிதரே, அதி தூயவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
விடுவிப்பவரே, உபதேசிப்பவரே, மீட்பவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
நேசரே, மருத்துவரே, வசப்படுத்துபவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
ஜோதியே, அழகே, கொடை வள்ளலே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
முழு நம்பிக்கைக்குரியவரே, அதி அன்புக்குரியவரே, உதயத்தின் பிரபுவே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
தூண்டுபவரே, ஒளிர வைப்பவரே, மகிழ்வூட்டுபவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
கொடைகளுக்கு அதிபதியே, பேரிரக்க-முடையவரே, அதிபெரும் கருணையாளரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
நிலையானவரே, உயிரூட்டுபவரே, உயிரினத்திற் கெல்லாம் பிறப்பிடமே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
அனைத்துப் பொருளையும் ஊடுருபவரே, சகலத்தையும் கண்ணுறும் கடவுளே, திருவாக்கின் பிரபுவே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
தெளிவாய்த் தோன்றினும் மறைபொருளாய் இருப்பவரே, கண்களுக்குப் புலப்படாதிருப்பினும் பிரசித்தமானவரே, யாவராலும் தேடப்படும் பார்வையாளரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.
அன்பர்களைக் கொல்பவரே, கொடியவர்களுக்கருளும் ஆண்டவனே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!
நிறைவளிப்பவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரே!
குணப்படுத்துபவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! குணப்படுத்துபவரே!
நிலைப்பவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிலைப்பவரே!
என்றும் நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே!
எதன் மூலம் உமது வள்ளன்மை, கிருபை என்னும் வாசல்கள் அகலத் திறக்கப்பட்டனவோ, எதன் மூலம் நித்தியமெனும் அரியணையின்மீது உமது புனிதமெனும் திருக்கோவில் நிறுவப்பட்டதோ, அத் தாராளத்தன்மையின் சாட்சியாகவும்; எதன் மூலம், நீர், படைப்புப் பொருள்கள் அனைத்தையும் உமது அருட்கொடைகள், அருள்பாலிப்புகள் என்னும் பீடத்தின்பால் அழைத்தீரோ, அந்த உமது கருணையின் சாட்சியாகவும்; எதன் மூலம் உமது மாட்சிமையும், பேரழகும் வெளிப்படுத்தப்-பட்டிருந்தனவோ, உமது அரசின் வலுவும் தெளிவாக்கப்பட்டிருந்ததோ, அவ்வதிகாலை வேளையில், நீர், உமது “ஆம்!” என்னும் வார்த்தையைக் கொண்டு, விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ளோர் அனைவரின் சார்பாகவும் பதிலளித்தீரோ, அதன் சாட்சியாக, நான் உம்மைக் கெஞ்சுகின்றேன். மீண்டும், இவ்வதியழகான நாமங்களின் சாட்சியாகவும், இவ்வதி மேன்மையான, அதி விழுமிய பண்புகள் சாட்சியாகவும், உமது அதி உயர்வான நினைவின் சாட்சியாகவும், உமது தூய, கறையற்ற அழகின் சாட்சியாகவும், உமது அதி மறைவான மண்டபத்திலுள்ள மறைந்திருக்கும் ஒளியின் சாட்சியாகவும், ஒவ்வொரு காலையிலும், மாலையிலும் பெருந் துன்பம் என்னும் ஆடையினால் போர்த்தப்பட்டிருந்த உமது நாமத்தின் சாட்சியாகவும், இவ்வாசீர்வதிக்கப்பட்ட நிருபத்தினை வைத்திருப்போரையும், அதனை ஓதுவோரையும், அதனைக் கண்ணுற நேர்ந்-தோரையும், அது வைக்கப்பட்டுள்ள இல்லத்தைத் தாண்டிச் செல்வோரையும், பாதுகாக்குமாறு உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். ஆகவே, அதன் மூலம், நீர், ஒவ்வொரு நோயாளியையும் பிணியுற்றோனையும், வறியோனையும், எல்லாச் சோதனைகளிலிருந்தும், வேதனையிலிருந்தும், ஒவ்வொரு வெறுக்கத்தக்கப் பிணியிலிருந்தும், துயரிலிருந்தும், குணப்படுத்தி, அதன்வழி, உமது வழிகாட்டுதல் என்னும் பாதைகளிலும், உமது மன்னிப்பு, அருள் என்னும் வழிகளிலும் பிரவேசிக்க விரும்புகின்றவர்களுக்கு வழிகாட்டுவீராக.
நீர், மெய்யாகவே, ஆற்றல் மிக்கவர், சகலத்திலும் சுயஜீவியானவர், குணப்படுத்துபவர், பாதுகாப்பவர், அளிப்பவர், இரக்கமுள்ளவர், அதி தயாள குணமுடையவர், அதி கருணையாளர்.